செவ்வாய், 8 ஜூன், 2010

நான் மலரோடு தனியாக

தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிப்படங்களைத் தந்து, பிற்காலத்தில் வில்லன் வேடத்திலும் புகழ்பெற்று தமிழ்த் திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகர் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர். துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் பாணியிலமைந்த திரைப்படங்கள் இவரது தனித் திறமையைப் பறைசாற்றின. அதனால் தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என இவர் அறியப்பட்டார். சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி, காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சோகக் காட்சிகள் முதலான அனைத்து வகையிலும் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தவர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது மாபெரும் வரலாறு காணாத வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப் படத்தில் நடனமாதாக அறிமுகமாகிப் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "குடியருந்த கோவில்" திரைப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு எனும் புகழ்பெற்ற பாடலில் நடனமாடிய எல். விஜயலட்சுமியுடன் ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் இரு வல்லவர்கள், இப்படத்தில் இவரும் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் அவர்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து, இருவரும் திருடர்களாக வாழ்க்கை நடத்துவதாக அமைந்த கதையில் இவரும் எல். விஜயலட்சுமியும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

நான் மலரோடு தனியாக

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக