வெள்ளி, 27 நவம்பர், 2009

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

பாடலுடன் இசைந்து இசைத்து இசையாத உள்ளங்களை இசைய வைப்பது இசை. பாடல்களுள் சிறந்ததும் மிகவும் இனிமையானதும் தாலாட்டு. தாலாட்டுப் பாட்டைக் கேட்டு உறங்காத குழந்தைகள் மிகவும் சிலவாகவே இருக்க வேண்டும். குழந்தையைத் தொட்டிலிலிட்டு ஆட்டியவாறே தாய் பாடும் தாலாட்டைப் போல் இனிமையானது இவ்வுலகில் அக்குழந்தைக்கு வேறில்லை. தாலாடடுப் பாடல் தாய் மட்டுமே பாட வேண்டுமெனும் கட்டாயம் ஏதுமில்லை. தந்தை, சகோதரன் நண்பர் என யார் பாடினாலும் அது கேட்பதற்கு இனிமையாக இருந்தால் குழந்தை உறங்குதல் எளிது.
சிறுவனாக இருந்த காலத்தில் என் இளைய சகோதரியைத் தொட்டிலிலிட்டு ஆட்டித் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்த அனுபவமும், பின்னர் மணமாகி என் மகன் பிறந்த பின்னர் அவனைத் தூளியிலிட்டு ஆட்டித் தாலாட்டிய அனுபவமும் எனக்கு நிறைய உண்டு. என் மகன் பிறந்த காலத்தில் தமிழ்த் திரைவானில் பிரபலமானதொரு தாலாட்டுப் பாடலை நான் பாட, அதைக் கேட்டவாறு உறங்கப் பழகிய என் மகன் அப்பாடலைத் திரும்பத் திரு்ம்பப் பல முறைகள் பாடக் கூறிக் கேட்டதும் எனது வாழ்வில் மிகவும் சுவையான அனுபவம்.

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

திரைப்படம்: சின்னத்தம்பி
இயற்றியவர்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ
ஆண்டு: 1991

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

பாட்டெடுத்து நாம் படிச்சா காட்டறுவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
பாட்டெடுத்து நாம் படிச்சா காட்டறுவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்டே தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமி தான்
ஏடெடுத்துப் படிச்சதில்லே சாட்சி இந்த பூமி தான்

தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

சோறு போடத் தாயிருக்கா பட்டினிய பாத்ததில்லே
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லே
சோறு போடத் தாயிருக்கா பட்டினிய பாத்ததில்லே
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லே
தாயடிச்சு வலிச்சதில்லே இருந்தும் நானழுவேன்
நானழுகத் தாங்கிடுமா உடனே தாயழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்ல தான்

தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக