நாம் இன்பமாய் வாழ மிகவும் அவசியமானவை முழுமையான அறிவு தரும் கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான, ஆபத்ததி்ல் உதவு்ம் நணபர்ககள், அழியாத செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழும் வன்மையுடன் கூடிய உடல் நலம், நோயற்ற உடல், எப்பொழுதும் உற்சாகமாக சோர்வின்றி இயங்கும் மனம், என்றும் மாறாத அன்பைப் பொழியும் மனைவி, சொன்ன சொல் தவறாத குழந்தைகள், என்றும் குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் காக்கும் திறம், பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தடையில்லாத வாழ்க்கை நிலை, நாட்டில் தர்ம நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, நல்லோர் சேர்க்கை முதலியன ஆகும்.
இவை அனைத்தினையும் குறைவறத் தருபவள் அன்னை அபிராமியே.
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: அபிராமி பட்டர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவ்ர்: சீர்காழி கோவிந்தராஜன்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
அருமையான பதிவு சிவாயநம/அ.மெய்கண்டன்
பதிலளிநீக்கு