சனி, 31 அக்டோபர், 2009

ஆத்து வெள்ளம் காத்திருக்கு

அன்பு நண்பர்களே,

மனிதர்களாகிய நம் மனதில் குடிகொண்டுள்ள பாவ எண்ணங்கள் 6. அவை காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம் என்பன. இவை உலக சுகதுக்கங்களில் உள்ள பற்றுதலால் ஏற்படுபவை. இவை நம்மைப் படுகுழியில் தள்ளி நமது மகிழ்ச்சியை வேரோடு அறுக்கும் தன்மையுடையவை. 63 நாயன்மார்களுள் ஒருவர் திருக்குறிப்புத் தொண்டர். இவர் ஒரு சலவைத் தொழிலாளி. தினமும் சிவனடியார் ஒருவரது ஆடையைத் துவைத்து உலர்த்திக் கொடுத்த பின்னரே பிறரது ஆடைகளைத் துவைப்பது என ஒரு கொள்கையுடன் வாழ்ந்த இவரை சிவபெருமான் சோதனைக்குள்ளாக்கி ஆட்கொள்வது பற்றிய வரலாற்றை திருவருட் செல்வர் திரைப்படத்தில் காண்பித்துள்ளனர். சலவைத் தொழிலாளிகள் துணிகளைத் துவைக்கையில் அனைவரும் சேர்ந்து பாடுவது போல் அமைந்த இப்பாடல் நம்மை அழுக்குத் துணியுடன் ஒப்பிட்டு துணிகளில் இருக்கும் அழுக்கை நீரால் நீக்குதல் போல நம் மனதில் இருக்கும் பாப சிந்தனைகளை இறையருளால் நீக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றது: கவியரசு கண்ணதாசன் இயற்றி திரை இசைத்திலகம் கே.வி. மஹாதேவன் அவர்களின் இசையில் எஸ்.ஜி. கிருஷ்ணன் குழுவினருடன் டி.எம். சௌந்தரராஜன் இணைந்து பாடிய பொருள் பொதிந்த இப்பாடல் கேட்போரை மெய்ம்மறக்க வைக்கும் சிறப்புடையதாகும்:

ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பாடியவர்: எஸ்.ஜி. கிருஷ்ணன், டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: திருவருட் செல்வர்

ஓ... ஓ..
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா ஆஹா ஹா, ஓஹோ ஹா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா நாம
வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா
மனசு போல வெளுத்து வச்சி உறவைப் போல அடுக்கி வச்சு
வரவைப் போல மூட்டை கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயந்தான் வெள்ளையப்பா - அப்பப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா ஹாஹாஹஹா

கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ
கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா
கலயத்திலே கஞ்சி வச்சி காட்டுக் கீரை வதக்கி வச்சி
மதியத்திலே கொண்டு செல்வோம் வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
மனசுக்குள்ளே களங்கமில்லே வெள்ளையம்மா

ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா ஆஹா, ஓஹோ...
ஆடி ஓடி வேலை செஞ்சு அலுத்து வந்து படுப்பவரை
பாடிப் பாடித் தூங்க வைப்போம் வெள்ளையம்மா - நம்ம
பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - நம்ம
பரம்பரைக்குக் களங்கமில்லே வெள்ளையம்மா - ஆமம்மா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா - நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா - அப்பா
கல்யாணப் புடவையின்னு மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நெறம் பச்சையப்பா - போட்டுத்
துவைக்கையிலே வந்த நெறம் வெள்ளையப்பா
வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா ஆஹா, ஓஹோ
வேட்டி சேலை போட்டி போட்டு ஆத்துக்குக்குளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா - ஆனா
வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா
வீட்டுக்குள்ளே சேலை தானே வெல்லுதப்பா

பட்டுச் சேலை நூலுச் சேலை பளபளக்கும் ஜரிகைச்சேலை
கட்டம் போட்ட சாயச் சேலை கொட்டடிச்சேலை - நல்ல
கல்யாணக் கூரைச் சேலை சுங்கடிச்சேலை - துவச்சு
மூட்டை கட்டி எடுத்து வச்சாத் தீந்தது வேல

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து வச்சா வெள்ளையப்பா

வானவில்லைப் போலே ஆ.. ஆஆ.. ஓ.. ஓ..
வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா
வானவில்லைப் போல இங்கே வண்ண வண்ண சேலையெல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா - உங்க
புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா - எங்க
புத்தியிலே உள்ள நெறம் வெள்ளையம்மா

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா
உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
அருள் எனனும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

உயிரே அழுக்குத் துணி உவர்மண்ணே நம் பிறப்பு
பூவுலக வாழ்க்கை எனும் பொல்லாத கல்லினிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளூக்குதடா வெள்ளையப்பா - அவன்
அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா - இந்த
உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

பஞ்சிலே நூலை வைத்தான் நூலிலே ஆடை வைத்தான்
ஆடையிலே மானம் வைத்தான் - அந்த
மானத்திலே உயிரை வைத்தான் வெள்ளையப்பா
பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
பக்தருக்கு அருள் குறிப்பு பாமரர்க்கு பொருட்குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா - அது
முக்தி தரும் திருக்குறிப்பு வெள்ளையப்பா

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்குத் துணியும் நெறெஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா நல்லா
புழிஞ்சு கரையில் காயவச்சா வெள்ளையப்பா

புதன், 21 அக்டோபர், 2009

நம்பிக்கை கொள்வாயடா

உங்கள் வரவு நல்வரவாகுக!

அன்பு நண்பர்களே,

நாம் எங்கிருந்து வந்தோமென்பதும் தெரியாது, எங்கு போகி/றோம் என்றும் தெரியாது ஆனால் இப்பொழுது இவ்வுலகில் இருக்கிறோம் என்பதும் எல்லோருடனும் கலந்து பழகி மகிழ்கிறோம் என்பதும் தெரியும். இருக்கும் வாழ்நாளை இன்பமாய் எல்லோருடனும் ஒற்றுமையாய் சுகதுக்கங்களைப் பகிர்ந்து வாழ்வதே நம் அனைவரின் நோக்கம். அதற்கு உறுதுணையாய் நம் மனங்களை செம்மைப் படுத்தி சிந்தனையைத் தூண்ட "தினம் ஒரு தகவல்" எனும் அரிய பொக்கிஷத்தைத் தந்து வரும் ஆனந்த் பிரசாத் அவர்களின் வழியில் செயல்பட விழைகையில் தினம் நான் உங்கள் அனைவருக்கும் என்ன தரலாம் என்று யோசித்ததில் உதித்ததுவே "தினம் ஒரு பாடல்".

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்த ஏற்பட்ட பல வழிகளுள் இசை மிகவும் இனியதாகும். ஏதொரு கருத்தையும் ஒரு கதை வடிவிலோ, கட்டுரை வடிவிலோ, கவிதை வடிவிலோ எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல் அதற்கொரு இலயம் தந்து இசையோடு இசைத்திடின் கிடைக்கும் பலன் தனித்தன்மை வாய்ந்ததாகும்.

என்னோடு இசை கேட்டு உங்கள் துன்பங்களை சற்றே மறந்து "இவ்வுலகம் இனிது, இவ்வுலக வாழ்வு இனிது" எனும் மஹாகவி பாரதியாரின் வாய்மொழியை இசையால் அறிவோம்.

வீட்டுக்கு அஸ்திவாரம் அடிப்படை, வாழ்க்கைக்கு நம்பிக்கை அடிப்படை.

இன்றைய பாடல்:

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா