செவ்வாய், 24 நவம்பர், 2009

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடியாடி வேலை செய்து களைத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரவென்றே சிறந்த பல சுற்றுலாத் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இத்த்தலத்தில் சித்தாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. இங்கே இருக்கும் அருவிகளில் குளிக்கையில் அருவி நீரில் கலந்துள்ள பலவிதமான மூலிகைகளின் சிறப்பால் உடலுக்கு ஏற்படும் மகிழ்வும் தெம்பும் அளவிடற்கரியவை என்று இங்கே வந்து அருவிக் குளியலை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!

என்று திரிகூட இராசப்பக் கவிராயர் எனும் புலவர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் குற்றாலத்தின் எழிலைப் பாடியுள்ளார்.

இதே போன்றதொரு கருத்தைக் கவரும் இசைநயம் மிக்க பாடலை நம் அனைவருக்கும் பிரியமான பாடகரும் பாடியுள்ளார்:

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

படம்: பாவை விளக்கு
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவார்: சி.எஸ். ஜெயராமன்
ஆண்டு: 1960

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே

தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் ம்...
தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

எங்கும் பனி தூங்கும் மலை...
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே இங்கே
சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே
சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக் கிளியே குளிர்ச்சி
தந்திடுவான் இங்கு என்றும் வண்னக் கிளயே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே
வண்ணக் கிளியே

மருதமலை மாமணியே முருகய்யா

இரவும் பகலும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும் மாறி மாறித் தொடர்ந்து வரும் உலகில் மாந்தர்க்குத் துன்பம் நேர்கையில் அதனைத் துடைக்க உதவுவது தெய்வ சிந்தனை ஒன்றேயாகும். தெய்வம் இருக்கும் இடமும் தெய்வத்தின் உருவமும் தெரியாத நிலையில் நம்மில் ஒரு சாரார் மனித வடிவில் தெய்வத்தைத் தொழுகிறோம், ஒரு சாரார் உருவமற்ற இறைவனைத் தொழுகின்றனர். ஒரு சாரார் பெற்றோரையே தெய்வமாகத் தொழுகின்றனர். வேறு பலர் தமது வாழ்க்கைப் பாதையை அமைத்துத் தந்த தம் தலைவர்களையே தெய்வமாகத் தொழுகின்றனர்.
இவர்கள் அனைவரும் குழந்தைகளை தெய்வமாகப் போற்றி வணங்குவது அனைவரும் அறிந்த ஒன்று. கோகுலத்துக் கண்ணனையும் குன்றுதோறாடும் குமரனையும் குழந்தை வடிவில் வழிபடுவது சிறப்பு. முருகன் தெய்வமாய் அமர்ந்த ஆறு படைவீடுகளை அடுத்து தமிழ் மக்கள் யாவராலும் மிகவும் போற்றி வணங்கப்படும் திருததலம் மருதமலை. இது கோவை நகருக்கு அருகாமையில் உள்ளது. யானைகள் உள்ளிட்ட மிருகங்களைப் பழக்கி அவற்றைத் தன் திரைப்படங்களிலும் நடிக்க வைத்த சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் மருதமலைக்குப் பல குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்துள்ளார்.

சூரனையும் அவனைச் சேர்ந்த அசுரர்களையும் அழித்து வானவராம் தேவர்களின் குலத்தைக் காக்கவென்றே அவதரித்தத முருகன் தனது பக்தரான சின்னப்பா தேவரின் குலத்தையும் காக்கின்றான் என்று இருபொருள்பட கவிஞர் கண்ணதாசன் இயற்றி, கர்நாடக இசை வித்துவான் மதுரை சோமு அவர்களின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு பாடல்:

மருதமலை மாமணியே முருகய்யா

திரைப்படம்: தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: மதுரை சோமசுந்தரம்
ஆண்டு: 1972

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்

"அரிதரிது மானிடராதல் அரிது" என்றாள் ஔவை மூதாட்டி. காரணம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளை விட அறிவில் மேம்பட்ட பிறவி மானிடப் பிறவி. இயற்கையின் ரகசியத்தை ஆராய்ந்தறிந்து அவ்வறிவினால் புதியதோர் உலகத்தையே படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. அத்துடன் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி அத்துன்பத்தைத் தனதாகக் கருதி, கருணை கொண்டு முயன்று அதனைத் தீர்க்கும் குணமும் மனிதருக்கு இயல்பாகவே உள்ளது.
இதன் காரணமாகவே தெய்வ உருவங்கள் அனைத்தும் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன் படைக்கப் பட்டன. "தெய்வம் மானுஷ ரூபேண" என்று வடமொழியில் ஒரு கருத்து வெகுகாலமாகவே வழக்கிலுள்ளது. அதே கருத்தை "மனிதனென்பவன் தெய்வமாகலாம்" என்றும் "மனித வடிவில் தெய்வம்" என்றும் கவிஞர் கண்ணதாசனைப் போன்ற தமிழ்ப் புலவர்களும் கையாண்டிருக்கின்றனர்.

இத்தகைய தெய்வீக குணங்களை நீக்கி மனிதனை மிருகமாக மாற்றுவன ஆசையும் கோபமும். இவ்வுண்மையை உலகுக்கு உணர்த்தவென்றே தோன்றினார் புத்தபிரான்.

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்

அசோக் குமார்
பாபநாசம் சிவன்
ஜி. ராமநாதன்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ

உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே

மனிதர்களை மனிதர்களே அடிமைகளாய் விற்கும் கேடுகெட்ட பழக்கம் உலகெங்கிலும் பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. தற்காலத்திலும் இத்தகைய பழக்கம் பல இடங்களில் இரகசியமாக நடந்துகொண்டே இருக்கிறது. செய்திகளில் அவ்வப்பொழுது கொத்தடிமைகளாய் இருந்தவர்கள் பற்றியும் அவர்கள் மீட்பு பற்றியும் அறிகிறோம். கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள் ஏராளமானோர் இன்றும் பல இடங்களில் தங்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையில் குழந்தைத் தொழிலாளர்களாகத் தள்ளப்பட்டிருப்பதை அனைவரும் அறிவர். மேடைகள் தோறும் ஏழைகளுக்காகத் தாங்கள் பாடுபடுவதாக அடுக்கு மொழியில் முழங்கும் அரசியல்வாதிகள் எவரும் இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க உண்மையான முழு முயற்சி ஏதும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
இவ்வடிமை வியாபாரத்தில் பல இடங்களில் பெண்கள் போகப் பொருட்களாக விற்கப்படும் அநீதியும் அன்று தொடங்கி இன்று வரையிலும் வெற்றிகரமாக நடந்து வருகின்றது. அவ்வாறு போகப் பொருளாக விற்கப்படும் அழகிய பெண்ணொருத்தியை அவள் மேல் கருணையும் காதலும் கொண்ட வாலிபன் ஒருவன் விலைகொடுத்து வாங்க, அவனிடமிருந்து அப்பெண் தப்பிச் செல்ல முயலுகையில் அவளை ஒரு கயிற்றில் சுருக்குப் போட்டு மடக்கிப் பிடிக்கும் அவ்விளைஞன் பாடுவதாக அமைந்ததொரு இனிய பாடல்:

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே

படம்: பாக்தாத் திருடன்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்

காட்டுப்பூனை போல் முழிக்கிற திருட்டுப் பெண்ணே
காசைக் கொட்டி நான் வாங்கி இருக்கிறேன் கண்ணே
கன்னிப் பொண்ணு நீயே கட்டழகன் நானே
உன்னை இப்போ விட்டுவிடுவேனோ?

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு

இதுவரை பேகங்கள் இருக்கு எனக்கு
அதுலே சரி இடம் தருவேன் பீவி உனக்கு
அதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு இது ரொம்ப சகஜம் எனக்கு

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற எங்கே ஓடுற சொல்லு

தாடியப் பாத்து தயங்குது உனது மனசு
நாடியத் தொட்டு பாரு தெரியும் என் வயசு
ஓட எண்ணாதே மோடி பண்ணாதே இதுதான் உனக்குப் புதுசு

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்து நில்லு

சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

வாழ்வின் வழியில் எத்தனையோ இன்ப துன்பங்கள் வரினும், எவ்வளவோ உறவுகள் வந்து போயினும், இவை அனைத்தைக் காட்டிலும் நாம் அதிகம் பாதிக்கப் படுவது இயற்கையினாலேயே ஆகும். வாழ்நாளெல்லாம் உழைத்துப் பாடுபட்டுப் பெரும் பொருளீட்டி செல்வச்சீமான்களாக் வாழ்பவர்களானாலும், தினமும் பாடுபட்டாலேயே உயிர்வாழத் தேவையான பொருளினை ஈட்ட இயலும் நிலையில் வாழும் பரம ஏழைகளானாலும் அனைவரும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கவென்றே சிறிதாகிலும் காலம் ஒதுக்கி அக்காலத்தில் தமது தொழில் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இயற்கையோடு இயைந்து அக்காலத்தைக் கழிக்கின்றனர்.
வசதி படைத்தோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என மலைவாசஸ்தலங்களுக்குச் சென்று தங்குவர். வசதிக் குறைவோடு வாழ்வோர், ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்பதற்கேற்ப தங்களால் இயன்றபடி, கடற்கரைக்கோ, ஏதேனும் பூங்காவுக்கோ அல்லது அருகிலுள்ள மலைக் கோவிலுக்கோ சென்று வருவர்.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்

- என்று தனது மனத்தை அதிகம் கவர்வது இயற்கை எழிலே என்று தெளிவாகக் கூறுகிறார் பாரதியார்.

இயற்கையை அழகு படுத்துவதுடன் நறுமணமும் சேர்த்து இன்பம் தரும் சூழ்நிலையை உருவாக்குபவை மலர்கள். மலர்களின் அழகிலும் மணத்திலும் மயங்காதவர் உண்டோ? மலர்கள் பேசுமா? மலர்களோடு நம்மால் பேச முடியுமா?

சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே

படம்: கடவுளின் குழந்தை
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா
ஆண்டு: 1960

சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசுவதேனோ? ஏனோ?
அதுவே ஆனந்த ரகசியம் தானோ? ஆ
சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசுவதேனோ?
அதுவே ஆனந்த ரகசியந் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?

அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சொலையிலே
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி ஆ..ஆ.. ஓ..
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ?
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ?

அதுவே ஆனந்த ரகசியந் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?

அழகாகவே அந்தி நேரத்திலே
யமுனா நதி பொங்கும் ஓரத்திலே
குழலூது கண்ணன் சொல்லாத சொல்லை
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ?
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ?

அதுவே ஆனந்த ரகசியம் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?

சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசியதேனோ?
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?

ஆடை கட்டி வந்த நிலவோ?

விண்ணளந்த வெண்ணிலவு விண்ணினின்று இறங்கி வந்து மண்ணதனில் பெண்ணுருவில் வாழுகின்ற போதில் அதன் பொன்னுடலை மூட ஒரு ஆடை தர வேண்டுமெனில் போவதெங்கே?
வெறும் பஞ்சாலும் பட்டாலும் ஆன எந்த மெல்லிய ஆடைகளும் அந்த நிலவுப் பெண்ணின் ஒளிவீசும் எழில் மேனியை முழுதும் மறைக்கத் தக்கவையாகுமோ? ஆதலினால் விண்வெளியில் பவனி வரும் போதினில் வானமெனும் கடலினிலே அலைகளெனவே தோன்றி, அங்குமிங்கும் ஓடி அவளுடலை மூடி விளையாடி வந்த கருமுகிலும் வெண்முகிலும் கலந்துருவாக்கிய முகிலாடையையே அணிந்து வந்தாளோ?

ஆடை கட்டி வந்த நிலவோ?

படம்: அமுதவல்லி
இயற்றியவர்: தங்கை டி.என். ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
ஆண்டு: 1959

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்

கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

ஆ...ஆ..ஆ..

அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?

ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!
என்று பாவேந்தர் பாரதிதாசன் வியந்து போற்றி மகிழ்ந்து பாடிய வெண்ணிலா விண்ணில் நிலவும் இரவுப் பொழுதினை ரசித்து மகிழாத கவிகளுமில்லை காதலர்களுமில்லை. குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் மனதுக்கினிய வஸ்து ஒன்றுண்டென்னில் அது வானத்தில் மிதந்து வரும் நிலவன்றி வேறில்லை. குறிப்பாகக் காதல் வயப்பட்ட இளைஞன் ஒருவன் அக்குளிர் நிலவை விண்ணில் மட்டுமன்றி நேரில் தங்கள் காதலியின் முகத்திலும் கண்டு மகிழ்கிறான்.

"பொங்கி வரும் பெரு நிலவு போன்ற ஒளி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்"

என்று இக்கருத்தை ஏற்றிச் சொல்கிறார் மஹாகவி பாரதி.

வானிலே வரும் வெண்ணிலவு தன் காதலி வடிவில் வாழ்வில் தன்னுடன் வந்தால் ஒருவனுக்கு அதனை விடவும் வேறேது சொர்க்கம்?

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

திரைப்படம்: மௌனம் சம்மதம்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: இளையராஜா
பாடியோர்: கே. ஜே. ஜேசுதாஸ், சித்ரா
ஆண்டு: 1990

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா?
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?
என் அன்புக் காதலா எந்நாளும் கூடலா?
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் கையிலா?
பாற்போமே ஆவலா? வா வா நிலா

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உன்தன் வாக்கிலா?
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா?
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா?
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா?..

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

நான் அனுப்புவது கடிதம் அல்ல

உலக வாழ்வுக்கு ஆதாரம் காதல், அதனாலேயே, "காதல் காதல் காதல், காதல் போயில் காதற் போயின் சாதல் சாதல் சாதல்" என்று மஹாகவி பாரதி எழுதினாரோ? ஒருவன் ஒருத்தியை உள்ளத்தால் நேசித்து அவளுடன் இணைந்து வாழ விரும்புகையில் தன் உள்ளத்து ஆசைகளை அவளிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். இதற்குப் பல உபாயங்கள் இருப்பினும் தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் போல் தனது காதலைத் தான் காதல் கொண்ட பெண்ணிடம் முழுமையாக எடுத்துச் சொல்ல வல்லது வேறெதுவும் இல்லை.
காதல் கடிதம் எவ்வாறிருக்க வேண்டுமெனில், அதனை அப்பெண் படிக்கப் படிக்க அவள் உள்ளத்திலும் தன் மேல் காதல் உணர்வு தோன்றுமளவுக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். காதல் கடிதத்தில் எத்தகைய விஷயங்களை எவ்வாறு எழுத வேண்டுமெனில், அவள் மேல் தான் கொண்ட நேசத்தையும் அவளுக்குத் தனது உள்ளத்தில் தந்துள்ள உயர்வான இடத்தையும் தெளிவாக எடுத்துக் கூறி அவளுக்குத் தனது தூய்மையான நேசம் மிக்க மனத்தின் தன்மையையும் அவள் மேல் தான் கொண்ட காதலின் ஆழத்தையும் விளங்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

நான் அனுப்புவது கடிதம் அல்ல

படம்: பேசும் தெய்வம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1967

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

"வெஸ்டர்ன் கல்சர்" எனப்படும் அயல் நாட்டு நாகரிகத்தின் மேல் நம் நாட்டவருக்குள்ள மோகம் என்பது இன்று புதிதாய் ஏற்பட்டதல்ல. இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் அடியெடுத்து வைத்த நாளிலேயே துவங்கி வளர்ந்து படிப்படியாக நமது நாட்டையே அவர்களது கையில் தூக்கிக் கொடுக்கும் அபாயகரமான நிலையை உருவாக்கியது இத்தகைய மோகமே என விவரமறிந்த மூத்தவர்கள் கூறுவர்.
ஆங்கிலேயர்கள் ஊற்றிக் கொடுத்த சீமைச் சாராயத்திற்கும், பிற உல்லாச, சால்லாப விளையாட்டுக்களுக்கும் அடிமையான அந்தக் கால இந்தியப் பகுதிகளின் குறுநில மன்னர்கள் பலர் இத்தகைய ஆடம்பர நடவடிக்கைகளால் வெள்ளையருக்குப் பெரும் பணம் கடன்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீளும் நோக்கில் தமது நாட்டின் சில பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்கு அளித்தனர். இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகள் வளர்ந்து "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல" ஆங்கிலேயர்கள் நமது நாட்டிலிருந்த பல குறுநில மன்னர்களைத் தந்திரமாக ஒழித்துக் கட்டி சிறுகச் சிறுக நாட்டையே கைப்பற்றினர்.

நமது நாட்டிற்கு உலகளாவிய அளவில் மிகுந்த மரியாதை இன்றும் தொடர்ந்து கிடைப்பதற்கான முக்கியக் காரணம் நமது குடும்ப அமைப்பும், சமுதாயக் கட்டுப்பாடும், உயர்ந்த கலாச்சாரமுமே ஆகும். நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க தொன்மை வாய்ந்த கலைகள், குறிப்பாக, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலாய கலைகள் உலக அளவில் மிகவும் மேன்மை பெற்று விளங்குவதற்குக் காரணமும் அவற்றின் அடிப்படையான நமது கலாச்சாரமே ஆகும்.

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

படம்: அன்பு எங்கே
இயற்றிவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: வேதா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆஹாஹாஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே ஆஹாஹாஹா
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்
பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்
என்றார் மஹாகவி பாரதி.

சொர்க்கம், நரகம் என்று தனியாக ஏதும் கிடையாது. இவ்வுலகே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்பது கண்கூடு. வெயிலில் வாடும் உயிர்களுக்கு நிழல் தந்து, காற்றில் மிகுந்திருக்கும் கரியமில வாயுவை உண்டு பிராண வாயுவை உமிழ்ந்து, உயிர்கள் அனைத்தும் வாழ வழி செய்து, வான் மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைத்து, பூமியைக் குளிரச் செய்து, பயிர்கள் வளர ஏதுவாகி உலகிலுள்ளோர்க்கெல்லாம் உணவளித்துக் காக்கும் மரங்களையும் மரங்கள் மிகுந்த வனங்களையும் அழித்து, கல்லும் மண்ணும் கலந்து கட்டடங்கள் எனும் பெயரில் தம்மைத் தாமே உயிரோடு சமாதி வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மரங்களின் அழிவினால் அதிகமாகும் உஷ்ணத்தைக் குளிர்விக்கவென்று ரெஃப்ரிஜிரேடர், ஏர் கண்டிஷனர் எனும் பெயர்களில் கண்டறிந்து பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் ரெஃப்ரிஜிரண்ட் எனும் திரவம் ஆவியாகி மேலே சென்று ஆகாயத்தில் படர்ந்து நின்று உலகை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் காத்து ரக்ஷிக்கும் ஓசோன் படலத்தை அழிப்பதனால் உலகின் வெப்பம் மேலும் அதிகரித்து, துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் அதிகரித்து, ஜல சமாதியாகும் வழியையும் தேடிக்கொண்ட மனிதனுக்கு இவ்வுலகம் நரகமே.

ஆறுகளில் ஆலைக்கழிவுகளை அபரிமிதமாகக் கலப்பதால் ஆற்று நீரை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் கொடும் விஷமாக மாற்றுவதோடு, குடிநீர் வடிகால் வாரியங்களின் மூலம் பூமிக்கடியில் நிறுவப்படும் குழாய்கள் ஓட்டையாவதால் சாக்கடை நீர் குடி நீருடன் கலந்து வர எமனை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மானுடா, உனக்கு இவ்வுலகமே சொர்க்கமாக அமைய வழி தேடு, இயற்கையை அழிக்காமல் காப்பாற்று, இயற்கை உன்னை என்றென்றும் காப்பாற்றும்.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

திரைப் படம்: கள்வனின் காதலி
இயற்றியவர்: எஸ்.டி. சுந்தரம்
பாடியோர்: கண்டசாலா, பி. பானுமதி,
ஆண்டு: 1955

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ
ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

சுக முனிவர் ஒரு சமயம் "கடவுளே, கடவுளே யோ!" என்று கூவிக்கொண்டு போகையில் அங்கிருந்த மலை, சுனை, மேகம், நதி, ஓடை, மரம், செடி, கொடி, மலர், பறவை, விலங்கு அனைத்தும் "ஏன்? ஏன்?" என்று கேட்டனவாம். இதைத் தாயுமானவர், "அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்றதென்னே பராபரமே" என்று சொல்கிறார்.
"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹரண்யன் தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான்,
வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை,
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ?"

என்று மஹாகவி பாரதியார் சொல்கிறார்.

பக்தர்களுக்குள் நான் பிரஹலாதன் எனக் கண்ணன் தனது கீதையில் உரைக்கிறான். பிரஹலாதன் அன்பு வடிவானவன் என்பதை இரண்யன் சரித்திரத்திலிருந்து அறிகிறோம். இறைவன் இல்லாத இடமில்லை. இறைவனைக் காண வேண்டின் அகக்கண்ணைத் திறந்து வைத்து அன்பு நெறியில் செல்ல வேண்டும். அப்பொழுது இயற்கையின் ரகசியம் புரியும். அனைத்து உயிரினங்களுடனும் உள்ளுணர்வால் தொடர்பு கொள்ள இயலும். இதனையே ஆத்ம சக்தி என்பர்.

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

படம்: ஆனந்தி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்