செவ்வாய், 15 நவம்பர், 2011

பாதுகையே துணையாகும் எந்நாளும்

பாரத தேசத்தின் பெருமைக்குக் காரணமாய் விளங்கும் மனித நெறிகள முறையாகக் கடைபிடித்து உத்தமனாய், சத்திய சந்தனாய், தந்தை சொல் காத்த தனயனாக, ஏகபத்தினி விரதனாக, தன்னை நம்புவோரைக் காப்பவனாக, உலகிலுள்ள அனைவரையும் சகோதர பாசத்துடன் அரவணைப்பவனாக விளங்கிய உன்னத புருஷன் ராமனின் கதையை விளக்குவது ராமாயணம். இந்தியாவின் பழம்பெரும் இதிகாச காவியமான இராமாயணத்தில் அதனை சமஸ்கிருத மொழியில் ஆதியில் எழுதிய வியாசர் இராமனைக் கடவுளுடைய அவதாரமாக விவரிக்கவில்லை. இக்காவியத்தைத் தமிழில் புனைந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனது அவதாரம் குறித்து மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அயோத்தி நகரை ஆண்டுவந்த இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த தசரத மன்னன் நீண்ட காலம் புத்திரப் பேறின்றி வாட குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக அவனது முன்று மனைவியர் கௌசல்யா, கையேயி, சுமத்திரை ஆகியோர் கருவுற்று ராமன், பரதன் மற்றும் லக்ஷ்மண சத்ருக்கனர்களை முறையே பெற்றெடுத்து வளர்த்து வருகையில் உரிய காலம் வந்ததும் மன்னவன் தசரதன் தன் மூத்த ம்கனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான். இது கேட்ட அரண்மனைப் பணிப்பெண்ணான கூனி எனப்படும் மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்து, ஒரு முறை சம்பராசுரன் எனும் அரக்கனுடன் தசரதன் போர் செய்கையில் தசரதன் மயங்கி விழ, அவனது தேரை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்று அவனது உயிரைக் கைகேயி காத்ததனால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஏதேனும் இரு வரங்கள் தர விரும்புவதாகக் கூற, அவற்றைப் பின்னர் தேவைப்படுகையில் பெற்றுக்கொள்வதாக அவள் கூறிய சம்பவத்தை நினைவுபடுத்தினாள்.

இரு வரங்களுள் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்ற வரத்தால் ராமன் 14 ஆண்டுகள் வ்னவாசம் செய்யவும் மந்தரையின் துர்ப்போதனையின் படி கைகேயி மன்னனிடம் வரம் கேட்டாள். மன்னன் எவ்வலவோ மன்றாடிக் கெஞ்சி ராமனைக் காட்டுக்கனுப்பச் சொல்லாதே எனக்கெஞ்சியும் அவள் பிடிவாதமாக இருக்கவே மன்னன் என்னவோ செய்த்கொள், இனி என் முகத்தில் முழிக்காதே என் பிணத்தையும் நீயும உன் மகன் பரதனும் தீண்டக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு மூர்ச்சையாகிவிட்டான். இந்நிலையில் ராமனை வரவழைத்த கைகேயி மன்னனிடம் தான் பெற்ற வரங்கள் பற்றிக் கூறி அவற்றின் படி பரதன் நாடாள ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென அரசர் சொன்னார் என்றாள்.

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய்த்
தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவ மேற்கொண்டு
பூழிவெங்கான நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டின் வாவென்றியம்பினன் அரசன் என்றாள்"

இதனைக் கேட்ட ராமன் மன்னன் சொல்லவில்லையானால் என்ன நீங்கள் சொன்னால் நான் கேட்க மறுப்பேனா? பரதன் என் தம்பியல்லவா? அத்துடன் என்னை விடவும் நாடாள அவனே சிறந்தவன் அவன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமேயல்லவா? என்று பெருந்தன்மையுடன் கூறினான்.

"மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?"

என்று சொல்லிப் பின் சீதாவுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் சென்றுவிட, இதைக் கேள்விப்பட்ட மன்னன் மனமுடைந்து மரணமடைந்த நிலையில் சத்ருக்கனனுடன் தன் தாயின் தந்தையான தாத்தா கேகய மன்னனின் நாட்டுக்குச் சென்றிருந்த பரதன் திரும்பி வந்து தந்தை இறந்ததைக் கேட்டு சொல்லொணாத் துயருற்றுப் பின்னர் நடந்தவற்றைக் கேட்டுத் தன் தாயின் மேல் கோபம் கொண்டு அவளைத் தூற்றிய பின்னர் மந்திரி பிரதானிகளுடன் வனம் சென்று ராமனைத் திரும்ப வருமாறு அழைத்தான். ராமன் தந்தையின் சொல்லைக் காத்தல் தனயனின் க்டமையாதலால் பரதன் நாடாள்வதும் ராமன் வனவாசம் செய்வதுமான தந்தையின் கட்டளைகளை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தவே, பரதன் நாடாண்டான் எனும் அவப்பெயர் தனக்கு உண்டாகாமல் இருக்க வேண்டுமெனில் தான் அயோத்தி நகருக்குள்ளே செல்லாமல் இராமனின் பாதுகையே நாட்டை ஆள வேண்டுமெனவும் 14 ஆண்டுகளில் இராமன் திரும்பாவிடில் தானும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சூளுரைக்கிறான்.

இந்தக் காட்சிகள் சிவாஜி கணேசன் பரதனாகவும், என்.டி. ராமராவ் ராமனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினியாகவும் நடித்து 1958ஆம் ஆண்டு வெளிவந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் மிகவும் அழகுறப் படமாக்கப் பட்டுள்ளன. இராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றைக் கொண்டு நாடாளும் பரதன் குறித்த ஒரு அருமையான பாடல் இன்றைய பாடலாக வருகிறது:

Video:

http://www.thamizhisai.com/video/tamil-cinema/sampoorna-ramayanam/paathugaiye-thunaiyaagum.php

Audio:

பாதுகையே துணையாகும் எந்நாளும்

திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
இயற்றியவர்: தேவொலபள்ளி க்ரிஷ்ன சாஸ்திரி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1958

பாதுகையே பாதுகையே
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே

பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

உனது தாமரைப் பதமே உயிர்த்துணையாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா
பதினான்கு ஆண்டும் உன்தன் பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய அருள்வாயே ராமா

தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
சர்க்குணாதிபா ராமா ஸ்ர்வரக்ஷகா ராமா
தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
தந்தை சொல்லைக் காக்கும் தனயனான ராமா
தவசி போலக் கானிலே வாசம் செய்யும் ராமா
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா

நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

கடவுளை நம்பாமல் பகுத்தறிவுப் பாதையில் தாமும் நடந்து உலகையும் வழிநடத்துவதாகச் சொல்லிக் கொண்ட ஆஷாடபூதிகள் அனைவரது பொய்முகங்களும் உண்மையெனும் தெய்வ சக்தியால் வெளியாகி விட்டன. தன் ஆயுள் முழுவதும் மக்களைப் பொய்யான அன்பு வார்த்தைகளாலும் இனப்பற்று, மொழிப்பற்று, ஏழை பணக்காரன் என்பன போன்ற வேற்றுமைகளைக் காட்டியும் ஏமாற்றி வந்தவரின் முகத்திரை கிழிந்து விட்டது. வெளியே பயமில்லாதது போல் காட்டிக்கொண்டு இன்னமும் தான் சத்தியசந்தன் என்று சாதித்தபோதிலும் உண்மை என்ன என்பதும், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுப்பதும் உலகில் உள்ள உண்மையான பகுத்தறிவாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தெளிவாகி விட்டது.

எத்தனை கோடிகள் பொன்னும் பொருளும் மண்ணும் மணிமுடியும் ஆடை ஆபரணங்களும் சேர்த்தாலும் அவை யாவும் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகிவிடக்கூடும் என்பதுவே விதி. அதனை மனிதன் தன் சிறுமதியால் என்றும் மாற்றிட இயலாது. மனிதராய்ப் பிறந்த நாம் உண்மையில் தேட வேண்டியது நீரால் நனையாத, காற்றால் கரையாத, நெருப்பால் எரியாத, காலத்தால் அழியாத அனைத்திற்கும் மேலாக நின்று அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் ரக்ஷிக்கும் அந்த ஆண்டவன் எனும் ஆதிசக்தியை மட்டுமே. ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் யாவையுமாகி விளங்கும் இறைசக்தியான அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

என்று திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் பெருமையை திருநாவுக்கரசர் விளக்குகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இன்ப துன்பங்களுக்குள் சிக்கித் துயருராமல் பிறவியாகிய பெரும் கடலை நீந்திக் கடந்து என்றும் பிறவியில்லாத பெருநிலையை அடைய விரும்புவோர் செய்யத் தக்கது இறை வழிபாடு ஒன்றேயாகும். இறை வழிபாடு என்பது நாம் காணும் அனைவரிடத்திலும் அனைத்து உயிகள் மற்றும் ஜடப்பொருட்களிடத்திலும் இறைவன் உறைவதை அறிவதேயாகும். அத்தகைய மெய்ஞானம் அடையப் பெற்றவர் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணையாக விளங்கும் இறைவனின் திருவடிகளையே சென்று அடைவதுறுதி.

பக்தி மார்க்கத்தில் மனதைச் செலுத்தி அழியும் பொருட்களின் மேல் கொண்ட பற்றுக்களைக் களைந்து அழியாப் பொருளை அடைய வேண்டித் தவம் செய்வோரே அத்தகைய உயர் நிலையை அடையக்கூடும். அவ்வாறு மனதை ஆசை, கோபம்,குரோதம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய பாபங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்தும் மீட்டு இறைவனிடத்திலே ஐக்கியமாக்க வல்லது இசை. அதிலும் குறிப்பாக பக்திப் பாடல்கள். அவற்றுள்ளும் பஜனைப் பாடல்கள் பக்திப் பரவசத்தை எளிதில் உண்டு பண்ணக் கூடியவை. எளிய இனிய சொற்களால் புனையப் பட்டு எல்லோரும் ஒன்று கூடி இனிமையாய் மிக சுலபமாய் இசையோடு அனுபவித்துப் பாட ஏற்ற வன்னம் இத்தகைய பஜனைப் பாடல்கள் பல மொழிகளிலும் அமையப்பெற்றுள்ளன.

நம் ஊர்களில் மார்கழி மாதம் பிறந்ததும் தினந்தோறும் அதிகாலையில் பஜனைப் பாடல்களை பக்தர்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவெங்கும் நடந்து சென்று இசையுடன் பாடி நகரை வலம் வருவதும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் மரபு. இத்தகைய பஜனைப் பாடல்களையே பெரும்பாலும் பாடிப் பெரும்புகழ் பெற்ற மூதாட்டி பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் ஆவார். அவரது பஜனைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பாடுவதற்கு இனிமையானவை மனதை மயங்க வைத்து இறைவனிடத்திலே நம் மனங்களை ஐக்கியமாக்க வல்ல அருள் நிரம்பிய பாடல்களை அவர் நமக்காகப் பாடி வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று இன்றைய பாடலாகிறது.

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன்
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள்
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர்
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன்
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள்
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வ்ருகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட காலமே இவ்வுலக வாழ்வாக உள்ளது. இந்நியதி அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருவது இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் இயற்கை நியதியே. இன்பங்கள் நேர்கையில் மகிழ்ந்து கொண்டாடுவோர் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகையில் உலகமே துன்பமயமானதெனவும், உலகே மாயம், வாழ்வே மாயம் எனவும் கருதி உலக வாழ்வை வெறுப்பது அறியாமையே. பிறப்பும் இறப்பும் நிகழ்வது சிறிது காலமே. ஆனால் வாழும் காலம் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆகும் காலத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது. எனவே மரணத்தையும் மறுபிறப்பையும் குறித்து எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாது வாழ்நாள் உள்ளளவும் வருவது வரட்டும் என்று இன்பம் துன்பம் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப் பழகிக்கொள்வதே செய்யத் தக்கது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் இவ்வுண்மையை உணராது மதிமயங்கிய மாந்தர்கள் பலர் தமக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தவர்களைத் தேடித் தெளிவு பெற விழைகையில் தங்களைக் காட்டிலும் அறிவிற் குறைந்த வேடதாரிகளை அணுகி அவர்களை ஞானியர் எனவும் மஹா பக்திமான்கள் எனவும் எண்ணி ஏமாறுவது நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கேலிக்கூத்தாகும். இத்தகைய ஞானியர் போல் வேடமிட்டு சாமான்ய மக்களை ஏமாற்றும் மனிதர்களுக்கு இவ்வுலகில் குறைவில்லை. பொது மக்கள் பலர் தாராளமாக வாரி வழங்கும் பொருளைக் கொண்டு இத்தகைய வேடதாரிகள் செல்வந்தர்களாக விளங்குவதுடன் பிறர்க்குபதேசம் தனக்கில்லை எனும் வகையில் உலகிலுள்ள யாவருக்கும் தருமோபதேசம் செய்துவிட்டுத் தாங்கள் அந்தரங்கத்தில் ஆடம்பரமாக சிற்றின்பத்தில் திளைத்து உலகையே ஏமாற்றுகின்றனர்.

வாழ்வில் தோன்றும் இன்ப துன்பங்களால் மனம் குழப்பமடைகியில் அக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற நாம் இவ்வாறு வேடமணிந்த ஞானியர் யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. உண்மை ஞானியர் பலர் நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும் என்றும் உள்ளனர். அத்தகைய ஞானியரை அடையாளம் காண்பதும் மிகவும் எளிது. அதற்கு ஒரே வழி அனைவரிடமும் அன்புடன் பழகுவதே ஆகும். அவ்வாறு பழகுகையில் நம்மிலும் அதிகத் துன்பத்தில் வாழ்வோர் பலர் அத்துன்பங்களைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டு மகிழ்ச்சியுடனும் உள்ள நிறைவுடனும் வாழ்வதை நாம் காணலாம். குறிப்பாக வயதில் முதிர்ந்த உறவினர்களும் நண்பர்களும் வாழ்க்கையை நன்குணர்ந்தவர்களாக விளங்குவது நம் அறிவுக்குப் புலப்படும்.

உலக வாழ்வை வெறுத்து ஒதுக்க உபதேசம் செய்யும் மார்க்கம் உண்மை ஞான மார்க்கமாகாது. வாழ்க்கையை முழுமனதுடன் அனுபவித்து உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என யாவருடனும் கலந்து பழகி இன்ப துன்பங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து வாழ வழிகாட்டும் மார்க்கமே உண்மை ஞான மார்க்கமாகும். ஞானி என்பவன் தவம் செய்பவனாக இருக்க வேண்டியதில்லை. நம்மைப் போல் உலக வாழ்வில் இன்பங்களை எல்லாம் அனுபவித்து வாழ்பவனாகவும் இருக்கக்கூடும்.

மத்த மதகரி முகிற்குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதியகடுதோய்
மாடகூடச் சிகரமொய்த்த சந்திரகாந்த மணிமேடை யுச்சி மீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்துநகையார்களொடு
முத்து முத்தாய்க் குலவி மோகத்திருந்துமென் யோகத்தினிலை நின்று
கைத்தல நகைப்பட விரித்தபுலி சிங்கமொடு கரடிநுழை நூழை கொண்ட
கானமலையுச்சியிற் குகையோடிருந்துமென் கரதலாமலகமென்ன
சத்தமற மோனநிலை பெற்றவர்களுய்வர்காண் சனகாதி துணிபிதன்றோ
சர்வபரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே

என்று தாயுமானவர் காழ்வில் உய்ய வழி சொல்கிறார்.

இதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நமக்கு மகிழ்ச்சியூட்ட வல்லது இசையே. நல்ல இசை எவ்விதத் துன்பங்களில் கிடந்து வாடுபவரையும் தம் துன்பங்களைச் சற்றே மறந்து அவ்விசைக்க்கேற்ப ஆடவைக்கலாகும்.

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திரைப்படம்: கண்ணன் என் காதலன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்